பதிவு செய்த நாள்
22
செப்
2019
03:09
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாள் சமேத பூதேவி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது.
பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். வெளியூர் மற்றும் ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.* உத்தரகோசமங்கை அருகே அகரம் கதைக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் 18 வகையான விஷேச திருமஞ்சனம் நடந்தது. மூலவர்கள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வேத மந்திரங்கள் முழங்க திவ்யபிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டன. அலங்கார தீபாராதனை, சாற்றுமுறை பூஜைகள் நடந்தது. பூஜைகளை மணிவண்ண லெட்சுமணன் பட்டாச்சாரியார் செய்தார். பிரசாதம் வழங்கப்பட்டது.* சிக்கல் அருகே கொத்தங்குளம் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில் பழமை வாய்ந்த வைணவ திருத்தலம். இக்கோயில் மணவாள மாமுனிகள் பிறந்த இடமாகும். துாத்துக்குடி, நாங்குநேரி வானமாமலை மடத்தின் நிர்வாகத்திற்குட்பட்டதாகும். மூலவர், உற்ஸவர்களுக்கு 18 வகையான விஷேச திருமஞ்சனம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.வேத மந்திரங்கள் முழங்க திவ்ய பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டன. அலங்கார தீபாராதனை, சாற்றுமுறை பூஜைகள் நடந்தது. பூஜைகளை கோயில் பட்டாச்சாரியார் மாதவன் செய்திருந்தார்.*ராமநாதபுரம் அருகே சக்கரவாளநல்லுார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவிப்பட்டினம் கடலடைத்த ஆதிஜெகநாத பெருமாள் கோயில், ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில், பூசேரி, கொத்தன் குளம் உட்பட பெருமாள் கோயிலில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.*தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூ தேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.ஆஞ்சநேயர், கருட பகவானுக்கு தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.*பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உற்ஸவர் சுந்தரராஜப் பெருமாள் நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் சூரிய நாராயணனாக அருள்பாலித்தார். மூலவர் பரமஸ்வாமி ஏழுமலையானாக அலங்கரிக்கப்பட்டிருந்தார். பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில். புனிதப்புளி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.*எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவர் திருப்பதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.