ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் குளத்தின் வடக்கு பக்கத்தின் கற்சுவர்கள் சிதைந்து வருவதால், மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் மற்றும் சர்க்கரைகுளங்களின் கற்சுவர்கள், படிகள் சிதைந்து பல வருடங்களாகும் நிலையில், அரசின் பல்வேறு விதிமுறைகள் காரணமாக இன்னும் சீரமைக்கபடாத நிலை உள்ளது.இதனால், நாளுக்குநாள் அக்குளங்களின் உறுதித்தன்மை வலுவிழந்து வருகிறது.இந்நிலையில் திருப்பாற்கடல் குளத்தில் மேற்கொள்ளபடும் துார்வாரும் பணியால், வடக்கு பக்க கரையின் சில இடங்களில் கற்கள் சிதைந்து விழுந்துள்ளது. இதில் மழைநீர் சேகரித்தால், ரோடு அரிக்கபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போதே திருப்பாற்கடலை சுற்றி வலுவான கான்கிரீட் சுற்றுசுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.