Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கும்பேசுவர ஸ்வாமி கோவில் பங்குனி ... மத்திகிரி கோட்டை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2012
12:04

காரிமங்கலம்: காரிமங்கலம் மொரசுப்பட்டி முருகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று (ஏப்., 5) நடக்கிறது. காரிமங்கலம் அடுத்த மொரசுப்பட்டி முருகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. நேற்று பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை 7 மணிக்கு பக்தர்கள் அலகு போடுதல் நிகழ்ச்சியில் சிறிய மற்றும் பெரிய அளவிலான அலகுகள் குத்திக்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முன்னாள் எம்.பி., ராமராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். மாலையில் ஸ்வாமி திருவீதி உலாவும், 6ம் தேதி அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்வாமி பவன வருதலும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

* காரிமங்கலம் அபிதா குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை 9 மணிக்கு ஸ்வாமி ரதம் ஏறும் நிகழ்ச்சியும், 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன் துவக்கி வைக்கிறார். மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்வாமி திருவீதி உலாவும், வாணவேடிக்கையும் நடக்கிறது.

* தர்மபுரி நெசவாளர் காலனி, சக்தி விநாயகர் வேல்முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், பூஜையும் நடக்கிறது. பக்தகர்கள் காவடி எடுக்கும் நிகழ்ச்சியும், ஸ்வாமதி திருவீதி உலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் சிவானந்தம் மற்றும் செங்குந்த மரபினர் செய்து வருகின்றனர்.

* தர்மபுரி அன்னசாகரம் விநாயக, சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், இன்று பங்குனி உத்திர தேர்திருவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் பால்குடம் ஏந்தி திருவீதி உலா வருதலும், சிறப்பு அபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து தோரண வாயில் ஊஞ்சல் சேவையும், ஸ்வாமி மயில் வாகனத்தில் வீதி உலாவும் நடந்தது. நேற்று விநாயகர் ரதம், யானை வாகனத்தில் உற்சவமும் நடந்தது. இன்று (ஏப்., 5) காலை 9 மணிக்கு ஸ்வாமி ரதம் ஏறுதலும், நிலை பெயர்த்தலும், மஹாரதம் இழுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை அன்னசாகரம் செங்குந்த சிவநேய செல்வர்கள், விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; காவிரி தென்கரையில் உள்ள தளங்களில் 26-வது தலமாக ஆதிகும்பேஸ்வர சாமி கோவில் உள்ளது. உலகம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இன்று நவ.3ம் தேதி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிகதுவாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar