சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி தர்ம சம்வர்த்தனி உடனாய சுயம்பிரகதிஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, வடுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தனி சன்னதியில் வீற்றிருக்கும் அவரது சன்னதி முன் நேற்று காலை 10:00 மணிக்கு யாகசாலை நடத்தினர். கோயில் குருக்கள் ரவி தலைமையில் சுவாமிக்கு 21 விதமான அபிஷேகம், வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பைரவரை வழிபட்டனர்.