நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் சிவன் கோவில்களில், தேய்பிறை அஷ்டமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில், சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவில், மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில், தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு நேற்று இரவு 7:00 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜையை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு, காலபைரவரை வழிபட்டனர்.