திருப்பரங்குன்றம்: மதுரை மலையாளி சமாஜம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் ஓணம் உற்ஸ வம் நடந்தது.சமாஜம் தலைவர் பாபுராஜன் தலைமை வகித்தார். செயலாளர் பிரதீப்குமார் வரவேற்றார். தமிழக மலையாளி சமாஜம் பொதுச் செயலாளர் சோமன் மேத்யூ, அகில இந்திய பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.