Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிருங்கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ... மவுனசாமி மடத்தில் பவுர்ணமி வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரியில் வெங்கடேச பெருமாள் கோவில்:திருப்பதி தேவஸ்தானம் முடிவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2012
12:04

நகரி:தமிழகத்தின் தென்கோடி நகரமான கன்னியாகுமரியில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில், வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயார் கோவில் கட்டப்படுகிறது. தேவஸ்தான போர்டின் கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டது. கன்னியாகுமரியில் புதிதாக கோவில் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து, நேற்றுமுன்தினம் திருமலையில் நடந்த தேவஸ்தான போர்டின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர், தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜி, நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:கன்னியாகுமரியில் வெங்கடேச பெருமாள் கோவில் கட்டுவதற்கு தேவையான, நான்கரை ஏக்கர் நிலத்தை கன்னியாகுமரி விவேகானந்தா டிரஸ்ட், ஒதுக்கித் தந்துள்ளது. இதற்கான ஆவணங்கள் எங்களிடம் வழங்கப்பட்டுள்ளன.அங்கு, வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்ட, 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும். பழம்பெரும் நடிகை காஞ்சன மாலா, தனக்கு சொந்தமான சென்னையின் முக்கிய பகுதியில் உள்ள இடத்தை, தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அந்த இடத்தில் தேவஸ்தானம் சார்பில், கோவில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தங்க ஆபரணங்கள்:கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை, 34 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் கோவில் உண்டியல் மூலம் காணிக்கையாகக் கிடைத்துள்ளன. வரும், 28ம் தேதி முதல் இரண்டுமாத காலத்தில் அமெரிக்காவில், 10 நகரங்களில் சீனிவாச கல்யாண உற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இத்தகைய உற்சவங்களை நடத்துவதற்கான செலவை தேவஸ்தானம் ஏற்றுக் கொள்ளாதபடி, பக்தர்கள் அளிக்கும் நிதியுதவி மூலம் நடத்தவும், இந்நிகழ்ச்சிகளை நடத்த அர்ச்சகர்கள், அதிகாரிகள் கொண்ட தனிக்குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பவும் போர்டின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், "கல்யாண மஸ்து இலவச திருமண திட்டத்தின் கீழ், திருமலை உட்பட மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, 11 புண்ணிய ஷேத்திரங்களில் இலவச திருமணங்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. வி.ஐ.பி., தரிசன அனுமதிக்கு எவ்வித நடைமுறையை செயல்படுத்துவது என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar