ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல்களில், 36 லட்சத்து, 90 ஆயிரத்து, 756 ரூபாய் காணிக்கை வசூலானது. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. நிரந்தர உண்டியல்களில், 28 லட்சத்து, நான்கு ஆயிரத்து, 371 ரூபாய்; தட்டு காணிக்கை உண்டியல்களில், எட்டு லட்சத்து, 86 ஆயிரத்து, 385 ரூபாய் காணிக்கை இருந்தது. 160 கிராம் தங்கம் மற்றும் 986 கிராம் வெள்ளி இருந்தது. காணிக்கை எண்ணிக்கையில், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார். ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.