பதிவு செய்த நாள்
24
செப்
2019
02:09
அலங்காநல்லுார் : மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றம் செப்.,30 காலை 7:00 மணியில் இருந்து 7:29 மணிக் குள் நடக்கிறது.
அக்.,11 வரை நடக்கும் இவ்விழாவில் தினமும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமி அருள் பாலிப்பதோடு, பல்வேறு வாகனங்களில் உலா வருகிறார். அக்.,1 காலையில் கிருஷ்ணர் அலங்காரம், இரவு சிம்மவாகனம், 2ல் ராமர் அவதாரம், இரவு அனுமார் வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடக்கிறது. அக்.,3ல் காலையில் கஜேந்திர மோட்சம், இரவு கருடவாகனம், 4ல் ராஜாங்கசேவையும், இரவு சேஷவாகன புறப்பாடும் நடைபெறும்.அக்.,5ல் காலையில் காளிங்கநர்த்தனமும், இரவு மோகன அவதாரமும், தொடர்ந்து யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.
அக்.,6ல் காலையில் சேஷசயனம், இரவு புஷ்பசப்பரம், 7ல் காலை வெண்ணைதாழி, இரவு குதிரை வாகன புறப்பாடும், 8ல் காலையில் தேரோட்டம், இரவு பூப்பல்லக்கு நடக்கிறது. அக்.,9ல் பூச்சப்பரமும், அக்.,10ல் தெப்ப உற்ஸவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.