நெட்டப்பாக்கம் அருகே பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2019 02:09
நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடசே பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக் கிழமையொட்டி, அன்று காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. அன்று இரவு 8:00 மணிக்கு, கருட சேவை உற்சவம் நடந்தது.