பதிவு செய்த நாள்
26
செப்
2019
12:09
பழநி: பழநி முருகன் கோயிலில் 30 நாட்களில் ரூ.1 கோடியே 70 லட்சத்து 58ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
பழநி முருகன்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. ரொக்கமாக ரூ. 1 கோடியே 70 லட்சத்து 58 ஆயிரத்து 70, தங்கம் -890 கிராம், வெள்ளி- 10 ஆயிரத்து 970 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் -655 கிடைத்துள்ளது. தங்கம், வெள்ளியிலான கொழுசு, வேல், தாலி, பாதம், மோதிரம் உள்ளிட்ட பொருட்களையும் பக்தர்கள் செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மதுரை உதவிஆணையர் விஜயன், மேலாளர் உமா, அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.