ராமேஸ்வரம் கோயிலில் ரூ.73.24 லட்சம் காணிக்கைராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் 73 லட்சத்து 24 ஆயிரத்து 501 ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தினர்.
ராமேஸ்வரம் கோயிலில் ஆக.,21க்கு பிறகு நேற்று முன்தினம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்களை கோயில் ஊழியர்கள் திறந்து காணிக்கையை சேகரித்தனர். பின் கோயில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் கோயில் கல்யாண மண்டபத்தில் காணிக்கை பணத்தை எண்ணினர். கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், மேலாளர் முருகேசன்,கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணி, கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வன், கண்ணன் உட்பட கோயில் ஊழியர்கள் பலர் எண்ணினர். இதில் ரொக்க பணம் 73 லட்சத்து 24 ஆயிரத்து 501 ரூபாயும், தங்கம் 34 கிராம், வெள்ளி 1 கிலோ 495 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இக்காணிக்கையை இணை ஆணையர் உத்தரவுப்படி அரசு வங்கியில் டிபாசிட் செய்தனர்.