பதிவு செய்த நாள்
27
செப்
2019
12:09
நாமக்கல்: தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில், ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. புரட்டாசி இரண்டாவது வியாழனை முன்னிட்டு, நாமக்கல் அடுத்த தொட்டிப்பட்டி, ஷீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில் சிறப்பு ஆரத்தி நடந்தது. அதை முன்னிட்டு, நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காக்கட் எனும் ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த மலர்களால் சிறப்பு அலங்காரம், பாபாவின் பஜனை நிகழ்ச்சி, ஆரத்தி பாடப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.