திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்டு ஆதிரெத்தினகணபதி, பாரதிநகர் கற்பகவிநாயகர்,தொண்டி இரட்டை பிள்ளையார் ஆகிய கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டுசிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள்,பால், பன்னீர், பஞசாமிர்தம்மற்றும் பல அபிஷேகங்கள் நடந்தன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.