Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் ... சபரிமலையில் நடக்கும் பூஜைகளில் ஆசார குறைபாடு: ஜோதிடர்கள் தகவல்! சபரிமலையில் நடக்கும் பூஜைகளில் ஆசார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திரப் பெருவிழா ராமநாதபுரம் கோயில்களில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2012
10:04

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச்.,27ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் ஆன்மிக சொற்பொழிவுகளும், சிறப்பு தீபராதனைகளும் நடந்தது. முக்கிய விழாவான, நேற்று காலை 8 மணிக்கு நொச்சிவயல் ஊரணிகரையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து பால்காவடி, பால்குடம் புறப்பட்டு முருகன் கோயிலை பகல் 12.30 மணிக்கு வந்தடைந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. காப்புகட்டி விரதமிருந்து நூற்றுகணக்கான பக்தர்கள் "அரோகரா கோஷமிட்டு பால்குடம், காவடி, அலகுகுத்தி, பறவைகாவடி எடுத்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வழியெங்கும் பல்வேறு அமைப்பின் சார்பில் மோர், தண்ணீர் பந்தல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7.45 மணிக்கு கோயில் முன்பாக பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் நகராட்சி தலைவர் சேகர், எம்.ஆர்.டிரேடர்ஸ் இன்ஜினியர் ராமகிருஷ்ணன், ரெட்டையூரணி ஊராட்சி தலைவர் சத்தியமூர்த்தி, கனகமணி மருத்துவமனை டாக்டர்கள் அரவிந்தராஜ், பால்ராஜ், மதுரம், கனகப்பிரியா, அ.தி.மு.க., சட்டசபை தொகுதி செயலாளர் முருகேசன். வாசுதேவன் பாத்திரக்கடை உரிமையாளர்கள் ஜோதிமணி, சிங்காரவேலு, மோகன் ஸ்டோர் உரிமையாளர்கள் மோகன், சங்கர், சோமு, வேணு, ஊராட்சி தலைவர் முனியம்மாள் செல்வக்குமார், எல்.ஐ.சி., ஏஜன்ட் முருகேசன், வர்த்தக சங்க பொருளாளர் செல்வராஜ். உச்சிப்புளி ஆத்மஜோதி சேவை மைய நிறுவனர் விஸ்வநாதன், என்மணங்கொன்டான் ஊராட்சி தலைவர் காளீஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

தேரோட்டம்: பங்குனி உத்திர விழாவையொட்டி திருப்புல்லாணி ஆதி ஜெகன்நாதர் பெருமாள் சுவாமி கோயிலில் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஆதி ஜெகந்நாத பெருமாள் சுவாமி நான்குரத வீதிகளிலும் வலம் வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அகோபில மடத்தில் நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திவான் மகேந்திரன், செயலக அலுவலர் சாமிநாதன், கண்காணிப்பாளர் கண்ணன் பங்கேற்றனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar