பதிவு செய்த நாள்
27
செப்
2019
05:09
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை துவங்குகிறது.
உளுந்தூர்பேட்டை தாலுக்கா பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை துவங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு ஸ்ரீசெல்வர் மேனாவில் புறப்பாடும், அங்குரார்ப்பணம் நடக்கிறது. 29ம் தேதி காலை 7.30 மணிக்கு த்வஜாரோஹணம் திருப்பல்லக்கும், பகல் 12 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், ததியாராதனம், இரவு ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 30ம் தேதி பகல் 12 மணிக்கு திருபல்லக்கு திருமஞ்சனம், இரவு சந்திரபிரபையிலும், 1 ம் தேதி காலை திருபல்லக்கு திருமஞ்சனம், இரவு ஹனுமந்த வாகனத்திலும், 2ம் தேதி காலை திருபல்லக்கு விசேஷ திருமஞ்சனம், இரவு சேஷ வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது.
3ம் தேதி காலை திருப்பல்லக்கில் பெருமாள், நாச்சியார் திருக்கோலத்திலும், பகல் 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், ததியாராதனம், இரவு தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 5ம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், 7 ம் தேதி காலை 6 மணிக்கு திருமஞ்சனமும், ரதோற்சவம் நடக்கிறது. பெருமாள் தேரில் இருந்து புறப்பாடும், பக்தி உலாத்துதல், திருமஞ்சனம் நடக்கிறது. 9ம் தேதி இரவு விடையாற்றி உற்சவம், 10ம் தேதி மாலை 4 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா விஜயராகவ அய்யங்கார் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.