Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ப.வேலூர் நவராத்திரி கொலு பொம்மை ... திருப்பதி திருமலை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் திருப்பதி திருமலை கோயிலில் ஆழ்வார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் பிரம்மோற்சவம்: நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
பாதூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் பிரம்மோற்சவம்: நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

27 செப்
2019
05:09

உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை துவங்குகிறது.

உளுந்தூர்பேட்டை தாலுக்கா பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை துவங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு ஸ்ரீசெல்வர் மேனாவில் புறப்பாடும், அங்குரார்ப்பணம் நடக்கிறது. 29ம் தேதி காலை 7.30 மணிக்கு த்வஜாரோஹணம் திருப்பல்லக்கும், பகல் 12 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், ததியாராதனம், இரவு ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 30ம் தேதி பகல் 12 மணிக்கு திருபல்லக்கு திருமஞ்சனம், இரவு சந்திரபிரபையிலும், 1 ம் தேதி காலை திருபல்லக்கு திருமஞ்சனம், இரவு ஹனுமந்த வாகனத்திலும், 2ம் தேதி காலை திருபல்லக்கு விசேஷ திருமஞ்சனம், இரவு சேஷ வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது.

3ம் தேதி காலை திருப்பல்லக்கில் பெருமாள், நாச்சியார் திருக்கோலத்திலும், பகல் 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், ததியாராதனம், இரவு தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 5ம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், 7 ம் தேதி காலை 6 மணிக்கு திருமஞ்சனமும், ரதோற்சவம் நடக்கிறது. பெருமாள் தேரில் இருந்து புறப்பாடும், பக்தி உலாத்துதல், திருமஞ்சனம் நடக்கிறது. 9ம் தேதி இரவு விடையாற்றி உற்சவம், 10ம் தேதி மாலை 4 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா விஜயராகவ அய்யங்கார் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar