திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு ஏப். 7 பட்டாபிஷேகம். இக்கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் ஏப்., 8 பகல் 11.45 முதல் 12 மணிக்குள் நடக்கிறது. அதற்கு முன் நிகழ்ச்சியாக, ஏப். 7 இரவு 8.30 முதல் 8.45 மணிக்குள் கோயில் ஆறுகால் பீடத்தில் யாகம் வளர்த்து பூஜைகள் முடிந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு கிரீடம் சாத்துப்படியாகி பட்டாபிஷேகம் நடக்கிறது. ஏப்., 9 ல் காலை 6 மணிக்கு தேரோட்டம், ஏப்., 10ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.