முதுகுளத்துார்: முதுகுளத்துார் நகர் முக்குலத்தோர் உறவின் முறை சார்பாக செல்வி அம்மன் கோயில் பொங்கல் மற்றும் முளைக்கொட்டு திருவிழா நடந்தது.10 நாட்களுக்கு முன்பு இருந்து காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.
தினமும் இரவு பெண்கள்,இளைஞர்கள் கும்மி அடித்தும்,ஒயிலாட்டம் ஆடினர்.அக்.1 தேதி காலை 9 மணிக்கு முளைக்கொட்டு திண்ணையில் இருந்து பொங்கல் பெட்டி எடுத்து ஊர்வலமாக வந்து செல்வி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்தனர். பக்தர்கள் கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு முளைப்பாரி துாக்கி ஊர்வலமாக வந்தனர். நேற்று பெண்கள் முளைப்பாரி துாக்கி ஊர்வலமாக காந்திசிலை,பஸ்நிலையம்,வழிவிடு முருகன் கோயில்,அய்யனார் கோயில் வழியாக வந்து ஊரணியில் கரைத்தனர். விழா கமிட்டியாளர்கள் சார்பில் பொது அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு வள்ளி திருமண நாடகம் நடந்தது.