பதிவு செய்த நாள்
03
அக்
2019
11:10
ஸ்ரீவில்லிபுத்துார், : திருப்பதி பெருமாளுக்கு சாற்ற, ஆண்டாள் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு மற்றும் மங்கலப்பொருட்கள் எடுத்துச் செல்லும் வைபவம், ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று நடந்தது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது.திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் திருநாளன்று, பெருமாளுக்கு சாற்ற, ஆண்டாள் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு மற்றும் மங்கலப் பொருட்கள் எடுத்துச் செல்லும் வைபவம், நேற்று நடந்தது.நேற்று மதியம், குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு, மாலை, கிளி, பட்டு சாற்றி, மங்கலப் பொருட்கள் சமர்ப்பித்து, சிறப்பு பூஜைகளை, வாசுதேவபட்டர் செய்தார்.பின், அவை கூடையில் வைக்கப்பட்டு, திருப்பதிக்கு, காரில் எடுத்துச் செல்லப்பட்டன. இன்று, திருமலை மடத்தில், ஆண்டாள் கோவில் மங்கலப் பொருட்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, சேவாகாலம் மற்றும் திருவீதி சுற்றி, கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது.