பதிவு செய்த நாள்
03
அக்
2019
12:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஞானானந்த தபோவனத்தில், ஸ்ரீ சரத் நவராத்திரி விழாவை முன்னிட்டு, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில், ஸ்ரீ சரத் நவராத்திரி விழா கடந்த 28ம் தேதி கடஸ்தாபனத்துடன் துவங்கியது. விழாவின் 5ம் நாளான நேற்று அதிகாலை 5:30 மணிக்கு நவராத்திரி மண்டபத்தில் ஸ்ரீசக்கர நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, மேருவிற்கு லட்சார்ச்சனை, ஸ்ரீ ஞானாம்பிகை, ஸ்ரீ ஞான மகாலட்சுமி, ஸ்ரீ ஞான துர்க்காதேவிக்கு த்ரிசதி, சஹஸ்ர நாமார்ச்சனை சகல உபசாரங்களுடன் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7ம் தேதி மதியம் 1:30 மணிக்கு நவசண்டி ஹோமம், பூர்ணாகுதியும், விஜயதசமி தினமான 8ம் தேதி காலை 5:00 மணிக்கு துவங்கி 11:30 மணி வரை சுவாகினி, தம்பதி பூஜையுடன், நவாவரணசு பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கடஅபிஷேகம், மகிஷாசுரமர்த்தினி புறப்பாடு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தபோவன நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.