பதிவு செய்த நாள்
03
அக்
2019
12:10
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.அவலுார்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 30ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது.
2ம் நாளான நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு உற்சவர் அம்மன் காயத்ரி அன்னை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருக்கோவிலுார்ஞானானந்த தபோவனத்தில், சரத் நவராத்திரி விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. விழாவின் 5ம் நாளான நேற்று அதிகாலை 5:30 மணிக்கு நவராத்திரி மண்டபத்தில் ஸ்ரீசக்கர நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, மேருவிற்கு லட்சார்ச்சனை, ஞானாம்பிகை, ஞான மகாலட்சுமி, ஞான துர்க்காதேவிக்கு த்ரிசதி, சஹஸ்ர நாமார்ச்சனை சகல உபசாரங்களுடன் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7ம் தேதி மதியம் 1:30 மணிக்கு நவசண்டி ஹோமம், பூர்ணாகுதியும், விஜயதசமி தினமான 8ம் தேதி காலை 5:00 மணிக்கு துவங்கி 11:30 மணி வரை சுவாகினி, தம்பதி பூஜையுடன், நவாவரண பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி புறப்பாடு நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை தபோவன நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.