Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயர் உண்டியலில் ரூ.19 ... திருப்பூரில் ஆயுத பூஜை வந்தாச்சு! திருப்பூரில் ஆயுத பூஜை வந்தாச்சு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
20 லட்சம் பேர் தரிசித்த திருப்பதி திருக்குடைகள்
எழுத்தின் அளவு:
20 லட்சம் பேர் தரிசித்த திருப்பதி திருக்குடைகள்

பதிவு செய்த நாள்

04 அக்
2019
02:10

திருமலை: மொத்தம், 20 லட்சம் பக்தர்கள் தரிசித்த, ஹிந்து தர்மார்த்த சமிதியின் புதிய வெண்பட்டுக் குடைகள், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில், நேற்று மாலை சமர்ப்பிக்கப்பட்டன.

மக்களின் வாழ்வாதாரமான உணவு உற்பத்திக்குத் தேவையான மழையை, போதிய அளவு தரும்படி இறைவனிடம் வேண்டி, திருப்பதி ஏழுமலையானுக்கு, வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக வழங்கும் சம்பிரதாயம், நுாற்றாண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் இருந்து வருகிறது.ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், புதிய வெண்பட்டுக் குடைகள், ஆண்டுதோறும் சென்னையிலிருந்து பாதயாத்திரையாக எடுத்து வந்து, பிரம்மோற்சவத்தின் போது, திருமலையில் சமர்ப்பிக்கப் பட்டு வருகிறது.இந்த ஆண்டு, செப்., 28ல், சென்னை, சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து, திருக்குடை ஊர்வலம் புறப்பட்டது. திருப்பதி வரை, வழிநெடுக லட்சக்கணக்கான மக்கள், திருக்குடைகளுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர்.ஐந்து நாள் பயணத்துக்குப் பின், திருக்குடைகள், நேற்று மதியம் திருப்பதி வந்தன. திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலுக்கு, இரண்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

வீதி உலா: மாலையில், திருமலைக்கு வந்த திருக்குடைகளுக்கு, உள்ளூர் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருமலை மாட வீதிகளில், ஒன்பது வெண்பட்டுத் திருக்குடைகள், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டன.திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, துணை நிர்வாக அதிகாரி ஹரீந்திரநாத், தலைமை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி கோபிநாத் ஜெட்டி உள்ளிட்ட அதிகாரிகள், திருக்குடைகளைப் பெற்றுக் கொண்டனர். ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி கூறுகையில், ஆதிசேஷனின் அம்சமான திருக்குடைகள், 150 ஆண்டுகளாக தமிழகத்திலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. 20 லட்சம் பக்தர்கள், இந்த திருக்குடைகளை, பெருமாளின் அம்சமாகவே கருதி, பயபக்தியுடன் வழிபட்டனர். இதற்கான செலவுகள் அனைத்தையும் ஹிந்து தர்மார்த்த சமிதியே ஏற்று நடத்துகிறது, என்றார்.திருப்பதி ஏழுமலையான் கோவில் வாசலில், ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், வெண்பட்டு திருக்குடைகளை, அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வழங்க, திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, துணை நிர்வாக அதிகாரி ஹரீந்திரநாத், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி கோபிநாத் ஜெட்டி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar