பழநி ரோப்கார்’ பணிகள் தீவிரம் விரைவில் சோதனை ஓட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2019 03:10
பழநி: பழநி முருகன் கோயில் ‘ரோப்கார்’ பராமரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்று(அக்., 4) அல்லது நாளை (அக்., 5ல்) சோதனை ஒட்டம் நடைபெற உள்ளது.
பழநி முருகன்கோயில் ‘ரோப்கார்’ பராமரிப்பு பணிக்காக ஜூலை 29ல் நிறுத்தப்பட்டது. கம்பிவடம் உருளைகள், பெட்டிகள் கழற்றும் தேய்மானம் உள்ள பாகங்கள் மாற்றும்பணி நடக்கிறது. பெட்டிகளுக்கு வண்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோல்கட்டாவில் இருந்து புதிய ‘சாப்ட்’ வரவழைத்து பொருத்தியுள்ளனர். தற்போது கம்பிவடத்தில் பெட்டிகளை இணைக்கும் பணி நடக்கிறது. பின்னர் பெட்டிகளில் குறிப்பிட்ட அளவு எடைக்கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெறும். இணை ஆணையர் ஜெயச்சந்திர பானுரெட்டி கூறுகையில், “ரோப்கார் பராமரிப்பு பணிகள் முடிய உள்ளது. இன்று (அக்., 4) அல்லது நாளை(அக்., 5) சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பின் பக்தர்கள் பயன்பாட்டிற்கு ‘ரோப்கார்’ இயக்கப்படும்” என்றார்.