மதுரை:மதுரை ஒத்தக்கடை ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு, அங்கபிரதட்சணம் செய்ய வரும் 150 பக்தர்களை, கந்த சஷ்டியின்போது 6 நாட்களும் சுவாமியை இலவச தரிசனம் செய்ய டோக்கன் வழங்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு,’கோயில் செயல் அலுவலர் அக்.,15 ல் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது,’ என்றனர்.