பதிவு செய்த நாள்
04
அக்
2019
03:10
சென்னை:பெசன்ட்நகர், அஷ்டலட்சுமி கோவிலில், உலக நன்மைக்காக, 1,008 கலச திருமஞ் சனம் இன்று (அக்., 4ல்) துவங்குகிறது.
பெசன்ட்நகரில் அமைந்துள்ளது, அஷ்டலட்சுமி கோவில். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், உலக நன்மைக்காக, 1,008 கலச திருமஞ்சனம் இன்று துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கின்றன.இன்று மாலை, 6:00 மணிக்கு மகா சங்கல்பம், விஷ்வக்ஷேனர் ஆராதனம் நடக்கிறது. அதை தொடர்ந்து, லட்சுமி குபேர ஹோமம், கலச ஆராதனம் நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு மகா பூர்ணாஹுதி நடக்கிறது.நாளை (அக்., 5ல்) காலை, 7:30 மணிக்கு நித்திய ஆராதனம் நடக்கிறது.
அதைத் தொடர்ந்து, விசேஷ ஸ்ரீ சுத்த ஆராதனம், 1,008 கலச திருமஞ்சனம் துவங்குகிறது. மதியம், 1:30 மணிக்கு பிரதான கலச திருமஞ்சனம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, நவராத் திரி விசேஷ அலங்காரம் நடக்கிறது.