மதுரை: மதுரை கூடல்நகர் அசோக்நகர் வரசித்தி விநாயகர் கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு அக்.8 வரை லட்சார்ச்சனை, தேவி மாஹாத்மிய பாராயணம், அக்.9ல் சண்டி யாகம், சுவாஷினி மற்றும் கன்னியா பூஜை, அக்.13ல் புஷ்பாஞ்சலி நடக்க உள்ளது.
கரியமாணிக்க பெருமாளுக்கு புரட்டாசி சனி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 4வது சனியான அக்.12ல் சுதர்சன யாகம் நடக்கிறது. நவராத்திரி தினசரி பூஜை, மற்ற பூஜைகளுக்கு தனித்தனி கட்டணம். விபரங்களுக்கு, பாஸ்கர வாத்தியாரை (98430 14721) தொடர்பு கொள்ளலாம்.