வடலுார்: வடலுாரில் வள்ளலாரின் 197 வது ஆண்டு வருவிக்க உற்றநாள் (பிறந்த நாள்) விழா வை முன்னிட்டு நாளை அக்டோபர் 5ம் தேதி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
வள்ளலார் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி மருதுாரில் பிறந்தார். அவரது 197வது வரு விக்க உற்றநாள் (பிறந்த நாள்) முன்னிட்டு வள்ளலார் நிறுவிய வடலுார் சத்திய ஞான சபை, தருமச்சாலை, மருதுார் ஆகிய இடங்களில் நாளை அக்டோபர் 5ம் தேதி சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இதனை முன்னிட்டு கடந்த 28, 29, 30ம் தேதிகளில் தருமச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணம் நடைபெற்றது. கடந்த 1ம் தேதி முதல் இன்று 4ம் தேதி வரை ஞான சபையில் திருஅருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இதையொட்டி, இன்று 4ம் தேதி மாலை 4 மணிக்கு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, நாளை காலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், காலை 7.30 மணிக்கு தருமச்சாலையில் சன்மார்க்கக் கொடி உயர்த்துதல் நடக்கிறது. தொடர்ந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் உள்ள ஞானசபை வழிபாட்டு மேடையை சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறு கிறது. விழாவை முன்னிட்டு சன்மார்க்க சொழ்பொழிவு, அன்னதானம் நடைபெறும்.