ராமநாதபுரம்:ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை சர்ச் பெருவிழா இன்று (அக்.,4) கொடியே ற்றத்துடன் துவங்குகிறது.
ராமநாதபுரத்தில் உள்ள ஜெபமாலை அன்னை சர்ச் பெருவிழா இன்று மாலை 5:45 மணிக்கு கொடியேற்றமும், நவநாள் திருப்பலியும் நடக்கிறது. தினமும் நவநாள் திருப்பலியில் மறை யுரையும் மாலை 5:45 மணிக்கு ஜெபமாலை சர்ச் சுற்றி அன்னையின் பவனியும் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக அக்., 12ல் மாலை 6:00 மணிக்கு திருவிழா திருப்பலியும், அன்னையின் தேர்ப்பவனியும் நடக்கிறது.
அன்று துாத்துக்குடி மறை மாவட்ட அதிபர் பாதிரியார் ரோலிங்டன், மதுரை மறை மாவட்ட பாதிரியார் பெனடிக்ட் பர்னபாஸ் ஆகியோர் மறையுரை வழங்குகின்றனர்.அக்., 13 ல் காலை 5:30 மணிக்கு திருவிழா திருப்பலியும், காலை 8:00 மணிக்கு புதுநன்மை திருப்பலி, திண்டுக்கல் மாவட்டம் பாதிரியார் ஜாலிமரிவளன், திண்டுக்கல் மாவட்டம் நொச்சியோடைப்பட்டி துணை முதல்வர் சூசைமாணிக்கம், மதுரை மாவட்டம் கருமாத்துார் குருமடத்தின் அதிபர் அந்தோணி ராஜா ஆகியோர் மறையுரை வழங்குகின்றனர். மாலை 5:30 மணிக்கு நிறைவு திருப்பலியும், நற்கருணைப்பவனி, கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. ராமநாதபுரம் வட்டார அதிபர் பாதிரி யார் அருள் ஆனந்த், துாத்துக்குடி மாவட்டம் சிறுமலர் குருமடம் தாமஸ் ஆகியோர் மறை யுரை வழங்குகின்றனர்.