திண்டுக்கல்லில் இருந்து திருப்பதிக்கு 800 கிலோ பூக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2019 12:10
திண்டுக்கல், நவராத்திரி பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு, திண்டுக்கல்லில் இருந்து திருப்பதிக்கு நேற்று 800 கிலோ பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
பழநி புஸ்ப கைங்கர்யா சபா மூலம் திருப்பதிக்கு புரட்டாசி பிரம்மோற்ஸவ விழாவிற்காக 8 டன் பூக்கள் அனுப்புவது வழக்கம். இந்தாண்டு நடந்து வரும் பிரம்மோற்ஸவ விழாவிற்காக, திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து வாடாமல்லி, செண்டு மல்லி, சம்பங்கி, செவ்வந்தி உட்பட பல வகையான 800 கிலோ பூக்கள் லாரி மூலம் திருப்பதிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பதியில் கோயில் உள் மற்றும் வெளி அலங்காரம், சுவாமி அலங்காரத்திற்கு பூக்கள் பயன்படுத்தப்படும். ஏற்பாடுகளை சபா பொறுப்பாளர் சிற்றம்பல நடராஜன், தலைவர் ஹரிகரமுத்து, பொருளாளர் மருதசாமி செய்திருந்தனர்.