பதிவு செய்த நாள்
05
அக்
2019
01:10
புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு, திருநீர்மலை ரங்கநாத பெருமாள் உற்சவர் வஜ்ராங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அன்னுார், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், இன்று அதிகாலை 4:30 மணிக்கு அபிஷேகம், 5:00 மணிக்கு அலங்காரம், 6:00 மணிக்கு நைவேத்தியம், 6:15 மணிக்கு சுவாமி உட்பிரகார உலா, 6:30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பொங்கலுார், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. காட்டம்பட்டி ஊராட்சி, வரதையன்பாளையம், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், இன்று காலை 7:00 மணிக்கு, பெருமாள், ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஓரைக்கால்பாளையத்தில், ராமர் கோவிலில், அதிகாலையில் 5:00 மணிக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது. செம்மாணி செட்டிபாளையம், ராமர் கோவிலில், இன்று காலை 5:30 மணிமுதல் வழிபாடு நடைபெற்றது.