பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு உற்சவர் பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 29ம் தேதி நவராத்திரி பூஜை துவங்கியது. 2ம் தேதி காலை 7:00 மணிக்கு சுப்ரபாதம், காலை 7:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், மாலை 5:00 மணிக்கு மூலவர் பெருந்தேவி தாயார், மூலவர் வரதராஜபெருமாள், அனுமன் சுவாமி ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடந்தது.மாலை 5:30 மணிக்கு 4ம் நாள் உற்சவத்தில் உற்சவர் பெருமாள், தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.