கல்லுக்குழி கோவிலில் உலக நன்மைக்கு ஏப்.7ல் மகா சுதர்சன ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2012 11:04
திருச்சி: திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக ஏப்.7ல் மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. இக்கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. 16 கரங்களுடன், சிறந்த வரப்பிரசாதியாக விளங்கும் இவரை பிரார்த்திதால் சிறந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த சக்கரத்தாழ்வாருக்கு மாதந்தோறும், மகா சுதர்சனரின் ஜன்ம நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தன்று உலக நன்மைக்காக மகா சுதர்சன யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வகையில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து சுதர்சனருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அடுத்து அலங்காரத்துடன் மகா ஆரத்தியும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "உலக நன்மைக்காக நடக்கும் இந்த ஹோமத்தில் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.