பதிவு செய்த நாள்
05
அக்
2019
03:10
உடுமலை:உடுமலை, தில்லை நகர், ஆனந்த சாயி கோவிலில், சீரடி சாயிபாபா 101 சமாதி ஆண்டு விழா, அக்., 8ம் தேதி நடக்கிறது.
மகாசமாதி தினவிழாவையொட்டி, அன்று, காலை, 6:30 மணி முதல், சிறப்பு ஹோமம், அபிஷேக அலங்கார தீபாராதனை கூட்டு பிரார்த்தனை, மகாதீபாராதனையும் நடக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு அறக்கட்டளை மூலம் நோட்டு, புத்தகங்கள், வழங்கப்படுகிறது. நவராத்திரி விழாவையொட்டி, செப்., 29ம் தேதி முதல் அக்., 8ம் தேதி வரை கொலு வழிபாடும் நடக்கிறது.