பதிவு செய்த நாள்
07
ஏப்
2012
11:04
நாமக்கல்: நாமக்கல் நரசிம்ம ஸ்வாமி கோவில் திருத்தேர் விழாவில், மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியின் அருள் பெற்றுச் சென்றனர். நாமக்கல் கோட்டை சாலையில், பிரசித்தி பெற்ற நரசிம்மர் ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் திருத்தேர் திருவிழா, மார்ச் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. அதையடுத்து, நேற்று திருத்தேர் திருவிழா நடந்தது. அதன்படி, கோட்டை நரசிம்மர் ஸ்வாமி திருத்தேரை, தொழில்துறை அமைச்சர் தங்கமணி, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன், எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். அதையடுத்து, பக்தர்கள் கோஷம் முழுங்க, திருத்தேர் கோட்டை சாலை, ஆஞ்சநேயர் கோவில் வழியாக உலா வந்தது. திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாலை ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் திருவீதி உலா நடந்தது. தேர்த்திருவிழாவில், மாவட்டம் முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.