கம்மாபுரம் சுப்ரமணியர் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2019 03:10
கம்மாபுரம்: புரட்டாசி மாத சஷ்டியை முன்னிட்டு, கம்மாபுரம் பகுதி சுப்ரமணியர் கோவில்களில் ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.
கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் சுப்ரமணியர் கோவிலில், நேற்று (அக்., 4ல்) காலை 9:00 மணிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உட்பட 108 அபிஷேக ஆராதனை நடந்தது.
மாலை 4:00 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.அதேபோல், சி.கீரனுார், விருத்தகிரிகுப்பம், விளக்கப்பாடி, ஊ.மங்கலம் சுப்ரமணியர் கோவில்களில், சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.