கரூர்: கரூர் அருகே, வேப்ப மரத்தில் பால் வடிவதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல் கின்றனர். கரூர் அருகே சோமூரில், அரசு துவக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்படு கிறது. இப்பள்ளி வளாகத்தில் பலவகை மரங்கள் உள்ளன. அதில், வேப்ப மரம் ஒன்றில், நேற்று (அக்., 4ல்) அதிகாலை முதல் பால் வடிகிறது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மரத்தை வந்து பார்த்து வழிபட்டு செல்கின்றனர்.