Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏப் 8-இயேசு உயிர்த்தெழுந்த நாள் இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டுதல் நிறைவேற்றிய மதுரை மீனாட்சி ; அன்னதானம் வழங்கினார் நாராயணசாமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2012
03:04

மதுரை: கூடங்குளம் பிரச்னை சுமுகமாக முடிந்து விரைவில் துவக்கிட வேண்டும் என மதுரை மீனாட்சியிடம் தாம் வேண்டியிருந்ததாகவும், இதனால் வேண்டுதலை நிறைவேற்றி தந்த சுவாமி சன்னதியில் அன்னதானம் வழங்கியதாகவும் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

இன்று காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி வந்தார். இவர் வருவதையொட்டி தயாராக சுடச், சுட வைக்கப்பட்டிருந்த பொங்கலை பக்தர்களுக்கு தாமே முன் நின்று வழங்கினார். நீண்ட வரிசையில் நின்றபடி பக்தர்கள் பெற்று சென்றனர். அன்னதானம் வழங்கிய பின்னர் நிருபர்களிடம் பேசிய நாராயணசாமி: தமிழகத்தில் கூடங்குளம் அணு மின்நிலையம் விரைவில் துவக்க வேண்டும் என்றும், எவ்வித பிரச்னையும் இல்லாமல் முடித்து வைக்க வேண்டும் என்றும் கடந்த முறை மதுரைக்கு வந்திருந்தபோது வேண்டி சென்றேன். மேலும் நல்லபடியாக முடித்து கொடுத்தால் பக்தர்களுக்கு நான் அன்னதானம் வழங்குவதாகவும் வேண்டுதலை மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் வைத்து சென்றேன். இது நல்ல படியாக நிறைவேறியிருக்கிறது. விரைவில் திறக்கப்படவுள்ளது. இதனால் சுவாமியை தரிசிக்கவும், அன்னதானம் வழங்கவும் வந்தேன்.
கூடங்குளத்தில் 2 அணு உலைகள் தயார் நிலையில் உள்ளன. முதல் அணு உலையில் 99 சத பணிகள் முடிந்து விட்டது. 2 மாதத்தில் மின்சார உற்பத்தியை துவக்கி விடுவோம். மற்றொன்றில் அடுத்த 2 மாதத்தில் துவக்கப்படும். மொத்தம் உற்றபத்தி செய்யப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழக முதல்வர் மற்றும் கட்சியினரும் கேட்டு வருகின்றனர். இதற்கு பிரதமர் நல்ல முடிவை அறிவிப்பார்.
இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கென அமைக்கப்பட்ட நல்லிணக்க குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படாததால், அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. தமிழகத்தின் ஒட்டு மொத்த ஆசையை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் பேசி நல்லதொரு முடிவு காணப்படும் இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar