ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் தனியார் பஸ் மோதியதால், இடிந்து விழுந்த ஆஞ்சநேயர் சன்னதி முன் மண்டப மேற்கூரையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணம் சன்னதி தெருவில் மிக பழமையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மேற்கூரை கருங்கல்லால் ஆனது. நேற்று, கோவிலுக்கு படைக்க வந்த தனியார் பஸ் மோதி, கோவிலின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மிக பழமையான ஆஞ்சநேயர் கோவில், மேற்கூரையை பழமை மாறாமல் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.