பதிவு செய்த நாள்
08
அக்
2019
03:10
நாகர்கோவில்:கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், பரிவேட்டை திருவிழாவை முன் னிட்டு, இன்று (அக்., 8ல்) மதியம், 12:00 மணி முதல், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திரு வள்ளுவர் சிலைக்கு, படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
கன்னியாகுமரியில், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திரு வள்ளுவர் சிலை அமைந்து உள்ளது. குமரிக்கு வரும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், தினமும், படகில் சென்று, இவற்றை கண்டுகளித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணியரின் வசதிக்காக, தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய, மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை, 8:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, இடைவேளை இன்றி, படகு போக்குவரத்து நடந்து வருகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா, 30ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று, பகவதி அம்மன், வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மகாதானபுரம் நோக்கி, பரிவேட்டைக்காக ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.இந்த ஊர்வலத்தில், 500க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.பரிவேட்டை விழாவில் சுற்றுலா பயணியர், விவே கானந்த கேந்திரா மற்றும் விவேகானந்த மண்டப ஊழியர்களும் பங்கேற்கும் வகையில், இன்று (அக்., 8ல்) மதியம், 12:00 மணி முதல், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.