திருப்பூர் சிவன்மலை கோவிலில் தீபம் விற்கும் நிர்வாகம்: கோர்ட் உத்தரவு மீறல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2019 04:10
திருப்பூர்:சிவன்மலை கோவில் வளாகத்தில், விதிகளுக்குப் புறம்பாக, கோவில் நிர்வாகமே ஸ்டால் அமைத்து தீபம் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் களில், வணிக நோக்கில் கடைகள் வைக்க அனுமதிக் கூடாது என கோர்ட் உத்தரவிட்டது.தீ விபத்துக்கு இடமளிக்கும் வகையில், பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடுதலை தவிர்க்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
ஆனால், காங்கயம் - சிவன்மலையில் உள்ள சுப்ரமணியர் கோவில் வளாகத்தில், கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் வளாகத்திலேயே தீபம் விற்கப்படுகிறது. கோர்ட் உத்தரவை கண்டு கொள்ளாமல் கோவில் நிர்வாகமே வளாகத்தினுள் கடை நடத்துவது அதிர்ச்சியளிப் பதாக, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். விதிமீறல் குறித்து கோவில் அலுவலகத்தில் கேட்டதற்கு, ’உதவி ஆணையர் மட்டுமே தகவல் தர வேண்டும். அவர் விடுப்பில் உள்ளார்,’ என்றனர்.