பதிவு செய்த நாள்
09
அக்
2019
11:10
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கோயில் நவராத்திரி விழாவில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் தினமும் ஒரு கொலு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உச்ச நிகழ்ச்சியாக நேற்று மாலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வெள்ளி வில், அம்புடன் தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமி முன் யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடந்தன. அங்குள்ள வன்னி மரத்தடியில், வில், அம்பு வைக்கப்பட்டு, சந்தனம், மஞ்சள் பொடி உட்பட திரவிய அபிஷேகங்கள், விக்னஷே்வர பூஜை, வர்ண பூஜை, எட்டு திக்குகளிலும் பலி பூஜை முடிந்து, சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சார்யாரிடம் வில், அம்பு வழங்கப்பட்டது. அவர் நான்கு திசைகளிலும் அம்பு எய்தார். தீபாராதனை முடிந்து பக்தர்களின் திருக்கண் மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்து சேர்த்தி சென்றார்.