திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை கோயில்களில் அம்பு எய்தல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2019 12:10
உத்தரகோசமங்கை, :திருப்புல்லாணியில் கல்யாண ஜெகநாத பெருமாளும், உத்தரகோசமங்கையில் சந்திரசேகர சுவாமி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.-திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மூலவர்களுக்கு விசஷே திருமஞ்சனம் ஆராதனைகள் நடந்தது. கோயிலில் அலங்கரிக்கப்பட்ட கொலுவின் முன்பு பஜனை, நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. நேற்று காலை 9:30 மணிக்கு நான்கு ரத வீதிகளில் குதிரை வாகனத்தில் உற்ஸவர் கல்யாண ஜெகநாதப்பெருமாள் உலா வந்தார். கோயிலின் வட கிழக்கு பகுதியில் வன்னி மரம் நடப்பட்டு அதனை சுற்றி வந்து நான்கு திசைகளை நோக்கி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.
* உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா நடந்தது. உற்ஸவர் சந்திரசேகரர் வில் அம்புடன் யானை வாகனத்தில் எழுந்தருளி வேட்டை மண்டபம் முன்பு காலை 9:00 மணிக்கு அம்பு எய்தல் நடந்தது. பழமையான வைணவ, சைவ கோயில்களில் இருந்து செல்லும் அம்புகள், ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பஷே்கார் மூலம் கொண்டு செல்லப்பட்டு, நேற்று ராமநாதபுரத்தில் இரவு 10:00 மணிக்கு மேல் மகர் நோன்பு திடலில் ராஜராஜேஸ்வரி அம்மன் அம்பு எய்தல் விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.