ராமநாதபுரம்: ராமநாதபுரம் குயவன்குடி சாய்பாபா கோயிலில் 101 வது மகா சமாதி பெருவிழா,விஜயதசமி விழா நடந்தது. சாய்பாபா மகா சமாதி விழா காலை 6:30 மணிக்கு ஆரத்தியுடன் துவங்கியது. 7:15க்கு கணபதி ேஹாமம், காலை 8:00க்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பாபாவுக்கு பல்வேறு வகையான பொருட்கள் தானமாக வழங்கினர். காலை 10:00 மணிக்கு அகண்ட பாராயணம் நடந்தது. பின் பகல் 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடந்தது. இரவு 8:30 மணிக்கு ஆரத்தியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஷீரடி சாய் ஆச்சார்யா தியான் மந்திர் சார்பில்செய்திருந்தனர்.