புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பிள்ளைச்சாவடியில் உள்ள சீரடி சாய்பாபா பிரார்த்தனை மண்டபத்தில், சாய்பாபவின் 101ம் ஆண்டு மகா சமாதி ஆராதனை விழா நடந்தது. அதையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு காக்கட ஆரத்தியும், கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து, சாயி மூல மந்திர ஹோமம், சாயிபாபாவிற்கு 108 பன்னீர் கலச அபிஷேகம் நடந்தது. காலை 9:45 மணிக்கு உற்சவர் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், பல்லக்கு உற்சவத்தை தொடர்ந்து, சாயிபாபாவிற்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.