புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பெரம்பை கிராமத்தில் உள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில், ஆராதனை விழா நடந்தது.
புதுச்சேரி வழுதாவூர் சாலையில், பெரம்பை கிராமம் பங்களாமேடு சாய்ராம் சிட்டியில், சர்வமங்கள சாயி சேவா சமிதி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு, சீரடி சாய்பாபாவின் 101வது மகா சமாதி ஆராதனை விழா நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. 10:00 மணிக்கு பக்தர்கள் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்தனர். ஆரத்தி காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, சர்வமங்கள சாய்பாபா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.