ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுப் பகுதி கோயில், நர்சரி மற்றும் துவக்க பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கான ஏடு துவங்கும் விழா நடந் தது.
அதிகாலை முதல் சொக்கர் கோயில், சாரதாம்பாள் கோயிலில் சரஸ்வதி தேவி சிலைக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. காலை 6:30 மணிக்கு சரஸ்வதி ஸ்லோகங்களை கூற அர்ச்சனை நடந்தது.
ஏடு துவக்க விழா நிகழ்ச்சிபோது பெற்றோருடன் வந்திருந்த குழந்தைகளுக்கு திலகமிட்டு குழந்தைகளின் நாவில் தேன்தடவி, பச்ச அரிசியில் ஓம், அ, எழுத்துக்களை எழுத கற்றுகொடுத் தனர். பின்பு பள்ளிகளில் தனது குழந்தைகளை சேர்த்தனர்.