Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜபாளையத்தில் ஷீரடி சாய்பாபா மகா ... திருத்தணி விஷ்ணு துர்கைக்கு விளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுக்கோட்டை 10ம் நூற்றாண்டை சேர்ந்த கல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
புதுக்கோட்டை 10ம் நூற்றாண்டை சேர்ந்த கல் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

09 அக்
2019
02:10

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் சூரன்விடுதி அருகே மாடு உரசும் கல் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கல் கருமணி குலத்திற்கு அருகே தற்போதுள்ள புதுவூரணியில் கிழக்குக் கரையில் மண்ணில் புதைந்து இருந்தது கண்டறியப்பட்டது.

இந்தக் குளக்கரையில் மேய்ச்சலுக்கு சென்று வரும் மாடுகள் இக்கல்லில் உடம்பை தேய்த்துக்கொள்வதற்காக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோயம்புத்தூரர், ஈரோடு மாவட்டத்தில் இது போன்ற கல் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளது. இதனை தொருக்கல் என்றும் ஆ தீன்று குற்றி எனவும் அங்கு குறிப்பிடுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கல் கண்டறியப்பட்டு அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. நச்சாந்துப்பட்டி அருகே உள்ள பிற்காலத்தை சேர்ந்த ஒரு கல்வெட்டில் மட்டும் மாடு உரசும் கல் என எழுத்து பொறிக்கப்பட்டு உள்ளது.

தற்போது கிடைத்த கல்வெட்டானது காலத்தால் பிற்பட்டது என்றாலும் இதில் எழுத்து இடம் பெறுவதற்கு மேல்பகுதியில் மாட்டின் உருவம் கோட்டுருவமாக காட்டப்பட்டு உள்ளது. அதன் வயிற்றில் விரல் தொடும் அளவிற்கு சிறு குழி ஒன்று உள்ளது. இது மாட்டை மனிதர்கள் சொறிந்து விடுவதன் குறியீடாக எடுத்துக்கொள்வதாக அமைகிறது. ஒருகாலத்தில் சூரன் விடுதி, கீழாத்தூர், மேலத்தூர் பகுதிகளுக்கு இந்த இடம் ஒரு மேய்ச்சல் நிலமாக இருந்திரு க்கவும் மேலும், மேய்ச்சலுக்கு வந்த கால்நடைகள் கருமினு குளம் புதுஊரணியில் இருந்த நீரினை அருந்துவிட்டு ஓய்வெடுக்கும் நேரங்களில் இந்தக் கல்லில் தனது உடம்பை தேய்த்து சொரிந்து கொண்டுள்ளது.

இது குறித்து தஞ்சை மாவட்ட தொல்லியல் அலுவலர் த. தங்கதுரை கூறியதாவது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது இந்த கல் தரை மேற்பரப்பில் முட்புதர் சூழ்ந்து இருந்தது. இதனை படியெடுத்து படிக்க அருகில் செல்ல முடியாதபடி இருந்தது. எனவே குழுவாகத் தேடினோம் அப்போது புதுவூரணியின் கிழக்கு கரையில் மண்ணில் மூடி இருந்த 7 அடி நீளம் 1 அடி அகலம் கொண்ட தூண் போன்ற கல்லில் எழுத்து இருந்தது கண்டறியப்பட்டது.

11 வரிசையில் எழுதப்பட்ட இக்கல்வெட்டில் சூரன் விடுதியை சேர்ந்த சு.ரெ. நாடியன் ணிணூ நூரடியான் ஆசாரிய பெண் சாதி (மனைவி) முத்தாயி என்றுள்ளது. 1917 சூன் மாதம் 17 ஆம் தேதி இந்த மாடு உரசும் கல்லினை தானமாக வைக்கப்பட்டதாக செய்தியினைக் கொண்டு ள்ளது. இந்த செய்தி கணவர் நினைவாக மனைவியும் கொடுத்திருக்கலாம்.

கால்நடைகள், மேய்ச்சல் நிலம் குறைந்துவரும் இக்காலக்கட்டத்தில் இது போன்ற கால்நடை களுக்கான நினைவுக் கல்லையும் கல்வெட்டுகளையும் பதிவு செய்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar