பதிவு செய்த நாள்
09
அக்
2019
02:10
திருத்தணி:திருத்தணி-, கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சாலையில், விஷ்ணு துர்கை அம்மன் கோவிலில், நவராத்திரி நிறைவையொட்டி, திருவிளக்கு பூஜை நடந்தது.
காலை, 10:00 மணிக்கு, பூ கரகம் ஊர்வலம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை, 4:00 மணிக்கு, அம்மன் வர்ணி ப்பு, மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜைநடந்தது.இதில், 108 பெண்கள் பங்கேற்று, விளக்கு பூஜையும், தொடர்ந்து தீச்சட்டி ஏந்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன்வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.