செஞ்சி:செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
அதனையொட்டி, கோவிலில் உள்ள துர்க்கைக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. 7ம் நாள் விழாவில் மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து துர்க்கை, மீனாட்சியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 7:30 மணிக்கு மகா தீபாரா தனையும், பக்தர்களுக்கு பிரசாத வினியோகமும் நடந்தது.இதில் நிர்வாக குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.