திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்தில் ஸ்ரீ சரத் நவராத்திரி விழா நிறைவாக மகிஷாசுரமர்த்தினி வழிபாடு நடந்தது.
தபோவனத்தில் நவராத்திரி விழா கடந்த 28ம் தேதி தொடங்கியது. விழாவின் நிறைவாக நேற்று முன்தினம் 7ம் தேதி நவசண்டி ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. நேற்று 8ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, சுவாசினி பூஜை, தம்பதி பூஜையுடன் நவாவரண பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கட அபிஷேகம், மகிஷாசுரமர்த்தினி புறப்பாடு, வன்னிமரத்தில் அம்பு எய்து அரக்கனை வதம் செய்யும் வைபவம் நடந்தது.ஏற்பாடுகளை தபோவன நிர்வாகி கிருஷ்ண மூர்த்தி மற்றும் நிர்வாகி கள் செய்திருந்தனர்.